ஊரடங்கை மீறியதால் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்றில் ஊரடங்கை மீறியதால் கைதான நால்வருக்கு விளக்கமறியல்

by Staff Writer 25-05-2020 | 5:45 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்க்கேணி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்ட விரோதமாகக் கூடியதுடன் மோதலில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்போது காயமடைந்த ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பதில் நீதவான் இஸ்மாயில் உவைசுர் ரஹுமான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவரை பார்வையிட்டதுடன் காயமடைந்தவரையும் ஏனைய சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.