148 வருடங்களின் பின்னர் நாட்டில் விருத்தியடையும் பறவையினம்...

by Staff Writer 24-05-2020 | 10:21 PM
Colombo (News 1st) Glossy ibis எனப்படும் புலம்பெயர் பறவை 1870 ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது. புந்தல தேசிய சரணாலயத்தில் இந்த பறவையை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். அயல் நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த பறவை வருவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர். 148 வருடங்களின் பின்னர் இந்த இன பறவை இலங்கையில் விருத்தி அடைகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புந்தல தேசிய சரணாலயத்தில் ஒரு பகுதியில் Glossy ibis பறவை 6 குஞ்சிகளுடன் இரண்டு கூடுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த பறவையினம் இலங்கையில் விருத்தி அடைந்தமைக்கான சான்று பதிவாகியுள்ளது. 1872 ஆம் ஆண்டு திஸ்ஸமகாராமய பகுதியில் இந்த இனத்தைச் சேர்ந்த பறவை 8 கூடுகளை கட்டியிருந்ததாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

ஏனைய செய்திகள்