பப்புவா நியூகினியின் முன்னாள் பிரதமர் கைது

நிதி மோசடி குற்றச்சாட்டில் பப்புவா நியூகினியின் முன்னாள் பிரதமர் கைது

by Staff Writer 24-05-2020 | 5:17 PM
Colombo (News 1st) நிதிமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பப்புவா நியூகினியின் முன்னாள் பிரதமர் பீற்றர் ஓ நீல் (Peter O'Neill) கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிலிருந்து 2 ஜெனரேட்டர்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமருக்கு எதிராக சாட்சியங்கள் காணப்படுவதாக பப்புவா நியூகினியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தம் மீதான குற்றச்சாட்டுக்கள், அடிப்படையற்றவையென முன்னாள் பிரதமர் பீற்றர் ஓ நீல் கூறியுள்ளார்.