நடைபயிற்சியாளர்கள் முகக்கவசம் அணிதல் உகந்தது

நடைபயிற்சியில் ஈடுபடுவோரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் 

by Staff Writer 24-05-2020 | 2:53 PM
Colombo (News 1st) நடைபயிற்சியில ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான உடற்பயிற்சிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபடுவதால், அவதானத்துடன் செயற்படுவது எனவும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.