சிகிச்சைக்காக சீஷெல்ஸ் பிரஜைகள் இலங்கை வருகை

சிகிச்சைக்காக சீஷெல்ஸ் பிரஜைகள் இலங்கை வருகை

by Staff Writer 23-05-2020 | 7:05 PM
Colombo (News 1st) சீஷெல்ஸில் இருந்து 35 பேருடன் புறப்பட்ட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. சீஷெல்ஸூக்கு சொந்தமான விமானத்தில் அந்நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். குறித்த 35 பேருக்கும் சிகிச்சையளிக்குமாறு சீஷெல்ஸ் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, சீஷெல்ஸ் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். குறித்த சீஷெல்ஸ் பிரஜைகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஜயநாத் கொலம்பகே மேலும் தெரிவித்தார்.