ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

by Staff Writer 23-05-2020 | 4:56 PM
Colombo (News 1st) எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாள்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.