மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

by Staff Writer 22-05-2020 | 7:09 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (23) மாலை 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின், இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிற்கான மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, குருணாகல், காலி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழான மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.