24, 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

by Chandrasekaram Chandravadani 22-05-2020 | 11:48 AM
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்பபடுத்தப்பட்டுள்ள நிலையில் , மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் நாளையும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.