இராமநாதபுரத்திலிருந்து 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி 

by Staff Writer 22-05-2020 | 5:13 PM
Colombo (News 1st) தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து 5 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் இராமநாதபுரம் - திருவடனை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் இரு சக்கர வாகனத்தை பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது, குறித்த வாகனங்களில் இருந்து மொதகோலைன், ஹெரோயின், ஓபியம் மற்றும் 1.5 தொன் செம்மரக் கட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.