அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் அமெரிக்க கொடி

அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் அமெரிக்க தேசியக் கொடி

by Bella Dalima 22-05-2020 | 4:04 PM
Colombo (News 1st) எதிர்வரும் மூன்று நாட்களுக்கு அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது. கொரோனாவினால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெக்சிக்கோவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைநகர் தவிர்ந்த ஏனைய நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் மாற்றப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ பகுதியிலுள்ள 64 அரச வைத்தியசாலைகளில் 26 வைத்தியசாலைகளிலும் கொரோனா நோயாளர்கள் மாத்திரமே உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 59,567 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதுடன் 6,510 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.