மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

10 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

by Staff Writer 21-05-2020 | 7:27 PM
Colombo (News 1st) 10 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (22) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.