மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் சாத்தியம்

மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவும் சாத்தியம்

by Staff Writer 21-05-2020 | 8:29 AM
Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையுடன் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மழையினால், நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்த அவதானம் மக்களிடையே குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 19,446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் இதுவரையில் 3,361 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.