by Staff Writer 21-05-2020 | 7:45 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்றும் (21) இடம்பெறவுள்ளது.
பொதுத் தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று (20) மூன்றாவது நாளாகவும் உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நேற்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.