சட்டத்தை மீறிய 17,949 பேருக்கு எதிராக வழக்கு

சட்டத்தை மீறிய 17,949 பேருக்கு எதிராக வழக்கு

by Staff Writer 21-05-2020 | 10:48 AM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய 668 பேர், 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதிக்குள் பொலிஸார் 248 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று (21) காலை 6 மணி வரை, ஊரடங்கு சட்டத்தை மீறிய 61,093 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் 17,172 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் இன்று காலை வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய ​17,949 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.