by Staff Writer 20-05-2020 | 8:26 PM
Colombo (News 1st) செவனகல பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 முதல் 20 வயதிற்கு இடைப்பட்ட 6 பேரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களில் குறித்த சிறுமியின் காதலனும் அடங்குகிறார்.
சிறுமியை பாழடைந்த வீடொன்றிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.