குவைத்திலிருந்து 446 பேர் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்திலிருந்து 446 பேர் நாட்டை வந்தடைந்தனர்

by Staff Writer 20-05-2020 | 9:44 AM
Colombo (News 1st) குவைத்தில் சிக்கியிருந்த 466 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். 179 பேரை ஏற்றிய குவைட் விசேட விமானமொன்று நேற்று (19) நள்ளிரவு நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றிரவு 6.50 மணியளவில் 287 பேரை ஏற்றிய மற்றுமொரு பயணிகள் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.