கடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன

by Staff Writer 20-05-2020 | 8:50 PM
Colombo (News 1st) குடாவெல்ல மற்றும் திருகோணமலையிலிருந்து கடலுக்கு சென்ற 30 படகுகள் இந்தோனேசியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஏப்ரல் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற படகுகளே சூறாவளி காரணமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொலைபேசியூடாக மீனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோதும், அது பலனளிக்கவில்லை. குடாவெல்ல பகுதியிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கடலுக்கு சென்ற 12 படகுகள் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளன. இதேவேளை, திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற படகுகளில் 150 -இற்கும் அதிகமான மீனவர்கள் உள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மப்பிரிய திசேரா தெரிவித்தார்.