ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

by Staff Writer 20-05-2020 | 10:15 AM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் 16,924 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 17,193 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.