ஊதியம் குறைப்பு ; ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

அறிவித்தலின்றி ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு 

by Staff Writer 20-05-2020 | 12:15 PM
Colombo (News st) எவ்வித அறிவித்தலுமின்றி சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்களின் ஊதியமே குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித வணிகசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. அண்மையில் இடம்பெற்ற பிராந்திய தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் பங்குபற்றிய கூட்டத்தில், நாளொன்றுக்கான கொடுப்பனவை அரசின் Covid - 19 நிதியத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இதற்கு சம்மதம் தெரிவிக்காதவர்களின் பணம் மீள வழங்கப்படவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.