தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 98 பேர் வௌியேறினர்

பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 98 பேர் வௌியேறினர்

by Staff Writer 19-05-2020 | 5:57 PM
Colombo (News 1st) பலாலி விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்தனர். இவர்களில் 10 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் இன்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.