பல பகுதிகளில் 150 மி.மீ வரையான மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 150 மி.மீ வரையான மழைவீழ்ச்சி

by Staff Writer 19-05-2020 | 9:12 AM
Colombo (News 1st) எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, களு கங்கை மற்றும் கிளை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, குருவிட்டை, அயகம, கிரிஎல்ல, எலபாத பகுதிகளில் வௌ்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல் செய்துள்ளது.