இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

by Staff Writer 19-05-2020 | 10:44 AM
Colombo (News 1st) இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் கீழ், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. யுத்த வெற்றியின் 11 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் பிரிகேடியர் பதவியிலிருந்த நால்வர் மேஜர் ஜெனரல் பதவிக்கும் கேர்னல் பதவி வகித்த நால்வர் பிரிகேடியர் பதவிக்கும் மேஜர் பதவி வகித்த 9 பேர் லெப்டினன் கேர்னலாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் கெப்டன் பதவியிலிருந்த 69 பேருக்கு மேஜர் பதவிக்கும் இரண்டாம் நிலை லெப்டினன் பதவியிலிருந்த 60 பேர் லெப்டினன் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.