நாட்டில் 992 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 992 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 19-05-2020 | 5:53 AM
Colombo (News 1st) 18/05/2020 ; 11.55 PM: நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றிய ​11 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் 21 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் எனவும் மற்றைய நபர் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்தவர் எனவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 992 பேரில் 424 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சீனப் பெண் உள்ளடங்கலாக இதுவரை 559 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாட்டில் 09 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஏனைய செய்திகள்