24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 2709 பேர் கைது

24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2709 பேர் கைது

by Fazlullah Mubarak 18-05-2020 | 9:53 AM

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 2709 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 946 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 59,035 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதிக்குள் 16 ,436 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களில் 15 ,695 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.