by Fazlullah Mubarak 18-05-2020 | 9:44 AM
19 ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணிப்பதற்காக சுமார் 11,500 பயணிகள் முற்பதிவு செ்யதுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 7 ரயில்கள், பிரதான மார்க்கங்களில் பயணிக்கவுள்ளன.
6 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் 4 ரயில்கள் களனிவௌி மார்க்கத்திலும் பயணிக்கவுள்ளன.
வடக்கு மற்றும் புத்தளம் மார்க்கங்களில் தலா ஒரு ரயில் பயணிக்கவுள்ளதாக டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் 2,600 இற்கும் மேற்பட்டோர் ரயில் பயணத்திற்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதனடிப்படையில் 10 ரயில்கள் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.