நாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 18-05-2020 | 7:22 PM
Colombo (News 1st) Update ; 18/05/2020 ; 6.30 PM : கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 986 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 981 ஆக பதிவாகியுள்ளது. நேற்றிரவு மேலும் 11 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நேற்று மாத்திரம் 21 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 19 பேர் கடற்படையினர் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஏனைய இருவரும் பிரத்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் என இராணுவத்தளபதி கூறியுள்ளார். குறித்த ஆணும் பெண்ணும் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானோரில் 413 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இன்று (18) மேலும் 21 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன்பிரகாரம் தொற்றிலிருந்து 559 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Covid - 19 தொற்றினால் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.