நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு இலங்கையிலுள்ள இந்திய பிரஜைகள் கோரிக்கை

by Staff Writer 18-05-2020 | 9:53 PM
Colombo (News 1st) கொரேனா தொற்றினால் ஏற்பட்ட நிலைமை காரணமாக நாடு திரும்ப முடியாதுள்ள இந்திய பிரஜைகள் இன்று (18) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக கூடினர். தம்மை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொழில், சுற்றுலா மற்றும் கல்வி போன்ற நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகைதந்த பலர் மீண்டும் இந்தியாயாவிற்கு திரும்பமுடியாதுள்ளனர். தம்மை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் துரிதப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக தனியார் விடுதிகளில் தங்கியுள்ள இவர்கள் பாரிய அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகக் கூடிய இந்திய பிரஜைகளை அங்கிருந்து வௌியேறுமாறு பொலிஸார் அறிவித்தனர். அவர்களில் சிலர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.