நாட்டின் 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

நாட்டின் 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

by Staff Writer 18-05-2020 | 2:47 PM
Colombo (News 1st) நாட்டின் 5 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல குறிப்பிட்டுள்ளார். இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியத்தின் அதிகாரிகள், இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியன இணைந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்