கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஐரோப்பிய நாடுகள்

கொரோனாவின் தாக்கம் ; கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஐரோப்பிய நாடுகள்

by Chandrasekaram Chandravadani 18-05-2020 | 7:12 PM
Colombo (News 1st) கொரோனாவால் முடங்கியிருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியன இன்று (18) மேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. இத்தாலியில் கடந்த 2 மாத காலமாக மூடப்பட்டிருந்த மதுபானசாலைகள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறைவாகப் பாதிக்கப்பட்ட தீவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை ஸ்பெயின் சிறிதளவாகத் தளர்த்தியுள்ளது. தினமும் பதிவாகிய உயிரிழப்பு எண்ணிக்கையில் சீரான வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.