நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்...

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்...

by Staff Writer 17-05-2020 | 3:10 PM
Colombo (News 1st) நாளை (18) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த வாரத்தில், ரயிலில் பயணிப்பதற்காக சுமார் 11,500 பயணிகள் முற்பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 7 ரயில்கள், பிரதான மார்க்கங்களில் பயணிக்கவுள்ளன. 6 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும் 4 ரயில்கள் களனிவௌி மார்க்கத்திலும் பயணிக்கவுள்ளன. வடக்கு மற்றும் புத்தளம் மார்க்கங்களில் தலா ஒரு ரயில் பயணிக்கவுள்ளதாக டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் 2,600 இற்கும் மேற்பட்டோர் ரயில் பயணத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். இதனடிப்படையில் 10 ரயில்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன. இதேவேளை மாவட்டங்களுக்கிடையில் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபை, சுகாதாரப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.