Colombo (News 1st) Update: 17/05/2020 ; 8.30 PM: நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 970 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
Update: 17/05/2020 ; 7.50 PM: நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Update: 17/05/2020 ; 7.00 PM: நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 960 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றிரவு (16) மேலும் 11 பேர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நேற்று மாத்திரம் 25 கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
25 பேரில் 23 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னையிலிருந்து வருகைதந்த ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்குள்ளானோரில் 431 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வாறாயினும் 520 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Covid - 19 தொற்றினால் இதுவரை 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.