காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 17-05-2020 | 2:45 PM
Colombo (News 1st) காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளி மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் H.S. பிரேமசிறி நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்துள்ளார்.