by Staff Writer 17-05-2020 | 2:41 PM
Colombo (News 1st) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார விநியோகம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பலத்த மழைவீழ்ச்சி மற்றும் கடும் காற்று காரணமாக 45,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று (16) மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.