COVID-19  நிதி 1 பில்லியன் ரூபாவைக் கடந்தது

COVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதி 1 பில்லியன் ரூபாவைக் கடந்தது

by Staff Writer 16-05-2020 | 7:24 PM
Colombo (News 1st) COVID-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைத்துள்ள நிதி ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளது. நிதியத்திற்கு உதவிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது ட்விட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். நிதியத்தின் நிதி வௌிப்படைத்தன்மை மற்றும் கணக்காய்விற்கமைய பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தகவல்களை மக்களுக்கு வௌிப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்