மட்டக்களப்பில் இளைஞர் கொலை

மட்டக்களப்பில் இளைஞர் கொலை

by Staff Writer 16-05-2020 | 3:21 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறமாக வருமாறு நேற்றிரவு 7.30 அளவில் தொலைபேசி அழைப்பு கிடைத்தபோது, அந்த இளைஞர் அங்கு சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சகோதரனால் தேடப்பட்ட போது, அந்த இளைஞர் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இளைஞர் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவு 9.50 அளவில் உயிரிழந்துள்ளார். கல்லடி, வேலூர் பகுதியை சேர்ந்த 29 வயதானவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.