கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 937ஆக அதிகரிப்பு

by Staff Writer 16-05-2020 | 3:30 PM
Colombo (News 1st) ​கொரோனா தொற்றுக்குள்ளான 408 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்றிரவு அடையாளம் காணப்பட்டனர். இன்று இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 520 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.