வாகன வருமானவரி பத்திரத்திற்கான சலுகைகாலம் நீடிப்பு

வாகன வருமானவரி பத்திரத்திற்கான சலுகைக் காலம் நீடிப்பு

by Staff Writer 15-05-2020 | 6:11 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் காலாவதியாகியுள்ள வாகன வருமானவரி பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன வருமானவரி பத்திரங்களுக்கே இந்த சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதிக்குள் காலாவதியாகும் வாகன வருமானவரி பத்திரத்தை புதுப்பிப்பதற்கு அபராதம் அறவிடப்படமாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.