யாழில் குணமடைந்த ஐவருக்கு மீண்டும் தொற்றுக்கான அறிகுறிகள்; வைத்தியசாலை பணிப்பாளர் விளக்கம்

by Staff Writer 15-05-2020 | 7:35 PM
Colombo (News 1st) யாழ். அரியாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த ஐவருக்கு மீண்டும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (15) தௌிவுபடுத்தப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இந்த விடயம் குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என நுண்ணுயிரியில் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரஜந்தி இராமச்சந்திரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்