நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

by Staff Writer 15-05-2020 | 2:42 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் தெற்கு அந்தமான் கடற்பரப்பை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கமே இதற்கு காரணம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மாத்தறை, காலி மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியக்குமாரன் தெரிவிக்கின்றார். கிழக்கு ஆழ்கடல் பகுதியை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வானிலை அதிகாரி குறிப்பிடுகின்றார்.