மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 14-05-2020 | 5:01 PM
Colombo (News 1st) Update: 10/05/2020 ; 04.45 PM : நாட்டில் மேலுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 916 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 10/05/2020 ; 10.00 AM: நாட்டில் Covid - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 கொரோனா நோயாளர்கள் நேற்றிரவு பதிவாகியுள்ளதுடன் நேற்று மொத்தமாக 26 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவ்வாறு நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் அனைவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று மேலும் 16 பேர் குணமடைந்தனர். இதனடிப்படையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 524 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதுடன் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கடற்படையினருக்கு நடத்தப்படும் PCR பரிசோதனையின் இறுதி கட்டம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.