by Staff Writer 14-05-2020 | 7:01 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது 3 மாத சம்பளமான 292,500 ரூபாவை Covid-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.
குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று (14) பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் P. B. ஜயசுந்தரவிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.