சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் சடலங்களாக மீட்பு

சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் காவலரணில் சடலங்களாக மீட்பு

by Chandrasekaram Chandravadani 14-05-2020 | 3:55 PM
Colombo (News 1st) மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso நாட்டில், பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 பேர் பொலிஸ் காவலரண்களில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த காவலரணில் 25 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் துரதிஷ்டவசமாக அவர்களில் பன்னிருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நகர சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகவில்லை. ஆனால், மூச்சுத்திணறலால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் AFP செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.