ராஜித சேனாரத்னவிற்கான பிணை உத்தரவு இரத்து

ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணை உத்தரவு இரத்து

by Staff Writer 13-05-2020 | 2:29 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவினால் பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சந்தேகநபரான ராஜித சேனாரத்ன தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் மூலம், ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கின்றது.