நாட்டில் 893 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 893 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 13-05-2020 | 7:37 PM
Colombo (News 1st) Update: 13/05/2020 ; 07.30 PM: நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------ Update: 13/05/2020 ; 03.45 PM: நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------------------------ 13/05/2020 ; 10.00 AM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு மேலும் ஐவர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டது. இதன்பிரகாரம்,நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 17 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். தொற்றுக்குள்ளான மேலும் இருவர் கடற்படை உறுப்பினர்களின் உறவினர்கள் என்பதுடன், மற்றுமொருவர் துபாயிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானோரில் 514 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்