காபூல் தாக்குதலுக்கு மைக் பொம்பியோ கண்டனம்

காபூல் வைத்தியசாலை தாக்குதலுக்கு மைக் பொம்பியோ கண்டனம்

by Chandrasekaram Chandravadani 13-05-2020 | 3:18 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மகப்பேற்று மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியே கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 கர்ப்பிணி தாய்மாரும் இரு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, நங்ககார் மாகாணத்தில் தற்கொலைதாரி ஒருவர் மரண வீட்டில் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் மன்னிக்கமுடியாது என மைக் பொம்பெயோ தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை தாக்கியமை அரக்க குணத்தின் வௌிப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.