வுஹான் வாழ் அனைவருக்கும் Covid -19 பரிசோதனை

வுஹான் வாழ் அனைவருக்கும் Covid -19 பரிசோதனை

by Chandrasekaram Chandravadani 12-05-2020 | 3:27 PM
Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரிலுள்ள அனைவரையும் 10 நாட்களுக்குள் Covid -19 பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வுஹான் நகரில் 11 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். குறித்த பரிசோதனைகள் தொடர்பில் அரசாங்கம் திட்டமொன்றை வகுக்கவுள்ளதாக சீன அரச ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. இந்நிலையில், சமூக ஒன்றுகூடல் தொடர்பில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமையால் வைரஸ் தாக்கம் மீண்டும் பரவும் அபாயம் அதிகமுள்ளதாக சீன அரசினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.