by Staff Writer 12-05-2020 | 2:43 PM
Colombo (News 1st) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL 20 சுட்டெண் 5 வீதத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்தமையினால் இன்று (12) காலை பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளாந்த புரள்வு 3 பில்லியனை விட அதிகரித்திருந்த நிலையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.
இன்று மதியம் 12 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த புரள்வு 3364.3 மில்லியனாக பதிவாகியிருந்தது.