கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்வு 

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 884 ஆக உயர்வு 

by Staff Writer 12-05-2020 | 10:18 PM
Colombo (News 1st) Update ; 12/05/2020 / 10.00 PM: நாட்டில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------- Update ; 12/05/2020 / 7.00 PM: நாட்டில் Covid-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 879 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  இன்றைய நாள் 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 9 பேர் கடற்படையினர் எனவும் மற்றைய ஒருவர் கந்தக்காடு கண்காணிப்பு முகாமில் தனிமைப்படுத்தபட்டிருந்தவர் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். --------------------------------------------------------------------------------------------------------------------------------- Update ; 12/05/2020 / 5.45 PM: கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------------------------------------- 12/05/2020 / 10.00 AM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.