ஊரடங்கை மீறிய 5,212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஊரடங்கை மீறிய 5,212 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

by Staff Writer 12-05-2020 | 5:35 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறிய 5,212 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 52,126 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இவர்களில் 9,783 பேர் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த காலப்பகுதியில், 13,594 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.