வைத்தியசாலை தாக்குதலில் 11 கர்ப்பிணி தாய்மார் பலி

ஆப்கான் வைத்தியசாலையில் தாக்குதல்; 11 கர்ப்பிணித் தாய்மார்கள் பலி

by Chandrasekaram Chandravadani 12-05-2020 | 9:55 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மகப்பேற்று விடுதிக்குள் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 கர்ப்பிணித் தாய்மார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது இரு குழந்தைகள் மற்றும் தாதிமார்களும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வைத்தியசாலையிலிருந்து 80 பெண்களும் குழந்தைகளும் ஆப்கன் படையினரால் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த வைத்தியசாலைக்குள் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அடங்கலாக 140 பேர் இருந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டின் கிழக்குப் பகுதியில் மரணவீடொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.